Description
About the book :
நரேந்திர மோடியின் எழுச்சி, இந்திய அரசியலில் முக்கியமான விடிவெள்ளித் தருணம், அவருடைய ஆளுமையின் உயர்வை அறிய வேண்டுமானால். பாரத நாட்டின் ஆட்சி முறையையும், அரசியல் வரலாற்றையும் மோடிக்கு முன், மோடிக்குப் பின் என்று இரு சகாப்தங்களாக பிரிக்க வேண்டும்.
குஜராத் முதல்வராக மோடி 2011ல் பொறுப்பேற்றார். அதன்பின் வந்த அனைத்துத் தேர்தலிலும் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லாமல், அம்மாநிலத்தின் மிக நீண்ட காலம் பதவி வகித்த முதல்வரானார். மோடி தெளிவான குறிக்கோளுடன், ஒரு பேருருவம் கொண்டு பயணித்து, பல்வேறு பரிமாணத்தில் மிக வேகமாக முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார். அவரை பெரும் பொறுப்புகள் அழைத்தன. குஜராத்தில் கிடைத்த மாபெரும் வெற்றி. மிகப் பெரிய புகழுடன் 2014ல் அவரை பாரத பிரதமராக்கியது. இதற்கு முன்னால் இருந்த எந்தப் பிரதமரைக் காட்டிலும் மோடி வித்தியாசமானவர் – அவருடைய வசீகரிப்பிலும் சரி. செயல்படுத்திய பணிகளின் அளவிலும் சரி. இதன் விளைவாக அவர் 2019ல் இன்னும் பெரும் வாக்கு எண்ணிக்கையுடன் மறுமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமூகம், அரசியல். நிர்வாகம் முதலான துறைகளில் அவருடைய செயல்பாடுகளின் விளைவுதான் அவருக்கு மாபெரும் புகழைத் தேடித் தந்துள்ளது, மோடியின் தாக்கம் – ஆளுமை இந்தியாவில் மட்டுமல்ல. எண்ணற்ற தேசிய மற்றும் சர்வதேச கணக்கெடுப்புகள். அவர் ஒரு மாபெரும் சர்வதேசத் தலைவர் என்று அறிவிக்கின்றன.
2011ல் மோடி. இடைவிடாமல் இருபது வருடங்கள் அரசாங்கத்தின் பொறுப்பிலிருந்து. நிறைவேற்றியுள்ளார்.
இந்த நூல், பல பிரபலமான சிந்தனையாளர் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. மோடியின் தனித்துவமான திறமை மற்றும் அரசாளும் செயல்பாட்டினால், குராத் மற்றும் இந்தியா எப்படி மாற்றங்களைக் கண்டுள்ளன என்பதை அழுத்தமாகவும் விரிவாகவும் ஆராயும் முயற்சிதான் இந்நூல்.
Translated by Mira Ravisankar ;
Reviews
There are no reviews yet.