Description
சுதந்திரத்திற்கு முந்தைய 15 நாட்கள் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள், காங்கிரஸ் மற்றும் தேசியத் தலைவர்களின் சந்திப்புகள், உரைகள், உரையாடல்கள், அவற்றினையொட்டி நிகழ்ந்த சம்பவங்கள் எனப் பல உண்மை வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பினை ‘வே பந்த்ரஹ் தின்’ என ஹிந்தியிலும், ‘Those 15 Days’ என ஆங்கிலத்திலும் நூலாக தொகுத்தளித்துள்ளார் பேராசிரியர் திரு. பிரசாந்த் போள் அவர்கள்.
இந்நூல் பல்வேறு இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளி வந்துள்ளது. நமது தமிழ் வாசகர்களும் இந்த அரிய வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக இந்நூலினை தமிழாக்கம் செய்து ‘அந்த 15 நாட்கள்’ எனும் தலைப்பில் வெளியிடுவதில் விஜயபாரதம் பிரசுரம் பேருவகை கொள்கிறது.
வரலாற்று ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தேசப் பற்றாளர்கள் மற்றும் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும், பாரத சுதந்திர வரலாற்றில் அதிகம் அறியப்படாத பல அரிய தகவல்களையும், தரவுகளையும் இந்நூலினைப் படித்து உணரலாம். இனி வரும் காலங்களில் இன்றைய தலைமுறையினர் மற்றும் வருங்கால சந்ததியினர் அனைவருக்கும் நமது தேசத்தின் உண்மையான சுதந்திர வரலாற்றினை அறிய இந்நூல் பேருதவியாகத் திகழும் என்று நம்புகிறோம்.
Publisher : Vijay Bharatam ; Paperback;Author : Prashanth Pole


Reviews
There are no reviews yet.