Description
About the book :
This is the Tamil translation of the epic ‘Bharati Itihasathile Saha Soneri Pane’
written in Marathi by Swatantrya Veer Vinayak Savarkar.
Translated into several languages, the book was published in Tamil in 1990 by Sri Annamalai.
மகோன்னதமான சரித்திர நிகழ்வுகளைக் கொண்ட தொன்மைமிகு பாரத தேசத்தின் வரலாற்றுத் தகவல்கள், அதன் பெருமைகள் கடந்த சில நூற்றாண்டுகளாக மேற்கத்திய கல்விமுறையினால், இம்மண்ணின் மைந்தர்களுக்கு சொல்லப்படாமலேயே மறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் வந்தன. சுதந்திர பாரதத்திலும் இந்நிலை தொடர்ந்தது நம் துரதிர்ஷ்டமே.
இந்த அவலத்தை துடைத்தெறிந்து, தனது எழுத்தெனும் கூர்முனையால் மக்களை விழிப்படையச் செய்தவர்தான் ஸ்வதந்த்ரவீரர் விநாயக தாமோதர சாவர்க்கர்.
அவரின் எண்ணப் ப்ரவாகத்தில் உருவான எழுத்துக் காவியம்தான் மராட்டியில் அவர் எழுதிய ‘பாரத இதிஹாசதீலே சஹ சோனேரி பானே’ என்ற உணர்ச்சிமயமான படைப்பு. பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த நூல், தமிழிலும் 1990ல் வரலாற்றுப் பேராசிரியரான திரு. அண்ணாமலை அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது. இனி வரும் தலைமுறையினரும் படித்து பயன்பெற வேண்டி 30 வருடங்களுக்குப் பிறகு இதன் ஆங்கில நூலைத் தழுவி மீண்டும் தமிழாக்கம் செய்ய விஜயபாரதம் பிரசுரம் முனைந்ததன் விளைவே இந்த மறு மொழியாக்க நூல்.
Reviews
There are no reviews yet.