Description
About the book :
சொல்மாலை என்ற இந்நூல் சுமார் 300 பக்கங்களுடன் அரிய செய்திகளைக் கொண்டு ஆலயங்களின் சரித்திரமாக அமைந்துள்ளது. 49 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெறுகிறது இதில் பல கட்டுரைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு ‘ஓம் சக்தி’, ‘ஞான பூமி’ போன்ற ஆன்மீகப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
வேதாரண்யத்தைப் பற்றிய கட்டுரை தருகின்ற செய்திகள் நம்மை வியக்கும்படி செய்கின்றன. வேதாரண்யம் என்பது திருமறைக்காடு. இங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள அப்பர் பெருமான், ‘அரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ எனப் பாடிப் பரவி உள்ளார். இங்குள்ள திருக்கோயில் அப்பரும், சம்பந்தரும் சேர்ந்து வந்து தரிசித்த சிறப்புக்குரியது. — பொள்ளாச்சி வள்ளல் நா. மகாலிங்கம்
Reviews
There are no reviews yet.